“திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை” - புதிய அரசியல் நகர்வு குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி விளக்கம்!

Dina AthibAn
0


“திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை” - புதிய அரசியல் நகர்வு குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி விளக்கம்!

சென்னை: "வரவிருக்கும் தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நான் போட்டியிடப் போவதில்லை" என்று பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவு, தற்பொழுது அரசியல் மற்றும் திரைத்துறையினர் இடையே பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் வேட்பாளர் தேர்வு தர்மம் குறித்து அவர் அந்தப் பதிவில் விரிவாகப் பேசியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சமீபத்தில் நான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பகிர்ந்த சில கருத்துக்கள் தவறாகத் திரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. நான் இன்று இந்த உயரிய நிலையில் இருப்பதற்கு ஒட்டுமொத்த பொதுமக்கள்தான் முக்கியக் காரணம். அப்படி இருக்கையில், என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் மக்களைப் பற்றி நான் தவறாகப் பேசியதாகச் சிலர் வதந்திகளைப் பரப்புவது என் மனதை ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது" என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து தனது தேர்தல் போட்டி குறித்துப் பேசிய அவர், "திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் எனப் பல தரப்பிலிருந்தும் தொடர்ந்து விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அரசியல் என்பது வெறும் பதவிக்கானது மட்டுமல்ல. விஜய் சார் திரையுலகில் அறிமுகமான காலம் தொட்டு, அவருக்காகப் போஸ்டர் ஒட்டி, அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவருக்காகக் களத்தில் நின்று உழைத்த எத்தனையோ உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். அந்த உழைப்பாளர்களையும், விசுவாசிகளையும் கடந்து, நான் திடீரென அங்கு சென்று போட்டியிடுவது அரசியல் தர்மமாக இருக்காது. யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை விஜய் சார்தான் இறுதி முடிவு செய்வார். எனவே, நான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதில்லை" எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், தான் தேர்தலில் போட்டியிடவே மாட்டேன் என்று கூறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ராகவா லாரன்ஸ், "நான் வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவில்லை; நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன். எங்கு சேர்ந்தால் நமக்கு முறையான மரியாதை கிடைக்குமோ, யாரிடம் இணைந்தால் மக்களுக்கு உண்மையாக நல்லது செய்ய முடியுமோ என்பதைத் தீர ஆலோசித்து, சரியான நேரத்தில் எனது அடுத்த அரசியல் முடிவை முறைப்படி அறிவிப்பேன்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!