சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்யாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தெப்ப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத்திரு திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பக்தி மெலிசை, பரதநாட்டியம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் 9ம் நாளான இன்று (வியாழக்கிழமை) தேர் ஊர்வலம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தனர்.
பின்னர் தாணுமாலய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 7.50 மணியளவில் சுவாமியும், அம்பாள், நாயகி அம்மன், விநாயகரும் தனித்தனியாக கோவிலில் இருந்து தட்டு வாகனங்களில் வெளியே வந்தனர். பின்னர் ஆயுதப்படை போலீசார் அணிவகுத்து சென்று மரியாதை செலுத்தினர்.
பின்னர் சுவாமி, அம்பாள் அம்மன் தேரிலும், அம்மன் சப்பரத்தேரியிலும், விநாயகர் விநாயகர் தேரிலும் எழுந்தருளினர். பின்னர் தேர் சக்கரங்கள் மீது சந்தனம் தெளிக்கப்பட்டு தேங்காய் உடைத்து தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, 8.10 மணிக்கு வடம்பிடித்து தேர் இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர், சரியாக 10.33 மணிக்கு முழக்கத்துடன் மேடையை அடைந்தது.
தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் வீதி உலா வந்த போது பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் மோர், பானங்கள், பழங்கள் போன்றவை வழங்கப்பட்டன.
10ம் நாள் திருவிழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள், பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.


AthibAn Tv