அமலாக்கத் துறையின் வாதங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், நாளை விசாரணை நடத்த வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் வாதத்தை நிராகரித்தது.

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையின் போது அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், 'சிறப்பு அமர்வு முன்பு மற்றொரு வழக்கு விசாரணைக்கு வருவதால் கோடை விடுமுறையின் முதல் வாரத்துக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும். '.
செந்தில்பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் ஆஜராகி, 'மனுதாரர் 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள், '300 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் மனுதாரருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. 2½ ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களின் வழக்குகள் உள்ளன' எனக் குறிப்பிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மற்றொரு வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி இருப்பதால் விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்க இயக்குனரகம் வாதிட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.இந்த வழக்கை நாளை விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அமலாக்கத் துறை வாதங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது.


AthibAn Tv