இண்டி கூட்டணி பெரும்பான்மை பெற்றால் யார் பிரதமர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது.
சமாஜ்வாடி கட்சியால் 4 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார். இந்தியக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் யார் என்றும் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதை சுட்டிக்காட்டிய அமித்ஷா, இந்தியா மளிகைக் கடை அல்ல, 140 கோடி மக்கள் வாழும் நாடு என்று கூறினார்.


AthibAn Tv