கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது.

இதற்கிடையில், கென்யாவின் பழமையான அணையான கிஜாப் அணை வெள்ளத்தால் சேதமடைந்தது. தடுப்பு சுவர் உடைந்ததால், வெள்ளம் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், எதிர்பாராத மழைக்கு முகம் கொடுக்க முடியாமல் கென்ய அரசு உலக நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.

AthibAn Tv