பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய குமாரசாமி முடிவு

Dina AthibAn
0

 பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பாஜக-ஜனதா தளம்(எஸ்) கூட்டணிக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., எம்.எல்.ஏ. பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பாலியல் புகாரை விசாரிக்க எஸ்ஐடி. குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் முடிந்து இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பாஜக-ஜனதா தளம்(எஸ்) கூட்டணிக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா எம்பியை சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யாக இருப்பதால் கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து அவரிடம் பேசியுள்ளேன் என்றும் குமாரசாமி கூறினார். அவர் மீதான நடவடிக்கை குறித்த அறிவிப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!