ஓசூரில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு பக்தர் ஒருவர் 45 அடி உயர அரிவாளை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள கருப்பசாமி கோயிலுக்கு பக்தர் ஒருவர் 720 கிலோ எடையுள்ள 45 அடி உயர அரிவாளை காணிக்கையாக அளித்துள்ளார். பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரபாகர் என்பவர் தனது ஆசை நிறைவேறியதால் இந்த பிரமாண்ட அரிவாளை கோவிலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
இதற்காக கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பீடத்தில் கிரேன் மூலம் அரிவாள் தூக்கி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

AthibAn Tv