நான் உயிருடன் இருக்கும் வரை தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் பிவானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்கு இரவோடு இரவாக ஓபிசி சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், ஊடுருவல்காரர்களுக்கும் ஓபிசி சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் கூறினார்.
இது தொடர்பாக கல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் அகில இந்திய தலைவர்களுக்கு நாட்டை விட வாக்கு வங்கியே முக்கியம் என்றும், வாக்கு வங்கிக்காக நாட்டை பிரிக்க நினைக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடி உயிருடன் இருக்கும் வரை தலித்துகள் அல்லது பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்றும் இது மோடியின் உத்தரவாதம் என்றும் பிரதமர் கூறினார்.


AthibAn Tv