நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமெரிக்க அதிபருடன் பேசினார் PM மோடி

Dina AthibAn
0
நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமெரிக்க அதிபருடன் பேசினார் PM மோடி...

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே செவ்வாய்க்கிழமை நாட்டின் பல பிரச்சினைகள் குறித்து அன்பான உரையாடல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், G-7 குழுமத்தின் தலைவர் பதவி குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பல முக்கியமான நாடுகளையும் சேர்க்கும் வகையில் அதன் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான விருப்பத்தையும் டிரம்ப் வெளிப்படுத்தினார்.
இந்திய-சீனா எல்லையில் நிலைமை, COVID-19 தொற்றுநோய் மற்றும் உலக சுகாதார அமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் போன்ற பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையின் போது, ​​அடுத்த G-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா வருமாறு பிரதமர் மோடியையும் (PM MODI) டிரம்ப் அழைத்துள்ளார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Had a warm and productive conversation with my friend President @realDonaldTrump. We discussed his plans for the US Presidency of G-7, the COVID-19 pandemic, and many other issues.
The richness and depth of India-US consultations will remain an important pillar of the post-COVID global architecture.
5,374 people are talking about this

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், G-7 குழுமத்தின் தலைவர் பதவி குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதனுடன், இந்தியா உள்ளிட்ட பல முக்கியமான நாடுகளையும் சேர்க்கும் வகையில் அதன் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், டிரம்பின் 'படைப்பு மற்றும் தொலைநோக்கு அணுகுமுறையை' பாராட்டிய மோடி, COVID-19 க்குப் பிறகு உலகின் மாற்றப்பட்ட யதார்த்தத்தை மனதில் வைத்து இதுபோன்ற விரிவாக்கப்பட்ட தளம் அவசியம் என்று கூறினார். உத்தேச உச்சிமாநாட்டை வெற்றிபெற அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது என்று டிரம்பிடம் மோடி கூறினார்.
உரையாடலின் போது, ​​டிரம்ப் தனது பிப்ரவரி இந்தியா பயணத்தையும் நினைவு கூர்ந்தார். இந்த சுற்றுப்பயணம் வரலாற்று மற்றும் பல வழிகளில் மறக்கமுடியாத சுற்றுப்பயணம் என்றும் இது இருதரப்பு உறவுகளுக்கு புதிய பரிமாணங்களை சேர்த்தது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தவிர, 'அமெரிக்காவில் நடக்கும் உள் நாட்டு போராட்டங்கள்' குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்ததோடு விரைவில் நிலைமை சீராகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

டிரம்புடனான உரையாடல் குறித்து ஒரு ட்விட்டர் பதிவில் வெளிப்படுத்திய பிரதமர் மோடி, "கொரோனா வைரஸுக்குப் பிறகும், இந்தியாவும் அமெரிக்காவும் செழிப்பு மற்றும் ஆழத்தின் முக்கியமான தூண்களாகத் தொடரும்." என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில்... 'எனது நண்பர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் உரையாடினேன். G-7, கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் பல பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்.' என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!