தமிழகத்தில் தொடர்ந்து 8 வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக இன்று (7 ம் தேதி), 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 31,667ஆகவும், மேலும் 18 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 269ஆகவும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் இன்று ( 7ம் தேதி) 1,515 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். ஒரே நாளில் 15,671மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 5,92, 970 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இன்று 604 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் 16,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று (7ம் தேதி) 18 பேர் உயிரிழந்துள்ளனர். 13503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களில் ஆண்கள். 19,634 பேர் பெண்கள்12,016 பேர் 12 வயதுவரை உள்ளவர்களில், 1,699பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 6 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.



AthibAn Tv