பாரதம் இமயம் இருந்து குமரி வரை ஒன்று என RSS அமைப்பின் அறிவுசார் பிரிவு அகில இந்திய தலைவர் ஜெ.நந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
வேத காலத்திலும், புராணங்களிலும், இடைக்கால இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும் இமயம் முதல் குமரி வரை பாரதம் ஒன்றே என்பதற்கு பல சான்றுகள் உள்ளன என்றார்.
மேலும், இதற்கு வலுசேர்க்கும் வகையில் அம்பேத்கரின் உரை அமைந்திருப்பதாகவும், இந்தியாவில் சிலர் அற்ப அரசியலுக்காக பிரிவினையை தூண்டுவதாகவும், இதனை ஏற்கனவே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆங்கிலேயர்கள் முன்வைத்த பிரிவினைக் கொள்கையை வெட்கமின்றி பின்பற்றிய சில பாரத எதிர்ப்பு சிந்தனையாளர்களையும் நந்தகுமார் விமர்சித்துள்ளார்.

AthibAn Tv