நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்... அதிர்ச்சியில் அண்ணாமலை

Dina AthibAn
0

 ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி. ஜெயக்குமாரை காணவில்லை என அவரது மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதில் ஜெயக்குமார் கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ஜெயக்குமார் கடந்த மாதம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், கே.பி. இதுகுறித்து ஜெயக்குமார் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் இன்று பிணமாக கிடந்தார். ஜெயக்குமார் உடலை கைப்பற்றிய போலீசார், ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்

இச்சம்பவம் குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் இணையதளத்தில், “காணாமல் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு.ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஜெயக்குமார் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த ஏப்ரல் 30ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததாக தெரிகிறது.ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் புகாரின் பேரில், தி.மு.க., ஆட்சியில் இந்த நிலை என்றால், சாமானியர்கள் சந்திக்கும் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பா என்ற கேள்வி வலுவாக எழுப்பப்படுகிறது.

உடனே மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரையும் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருமாறு தி.மு.க. நான் அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!