
பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில், மாணவர்கள், முஸ்லிம்களின் புனித நுாலான திருக்குரானை படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குரான் படிக்காத மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், முஸ்லிம் அல்லாத மற்ற மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் மாகாண கவர்னர் முகமது சர்வார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலையிலும் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


AthibAn Tv