Type Here to Get Search Results !

இந்தியாவில் ஒரே நாளில் 10,667 பேருக்கு தொற்று: 380 பேர் பலி



இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சமாக அதிகரித்தது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 9,900 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 091 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 013 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 10 ஆயிரத்து 215 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி

மஹாராஷ்டிரா - 1,10,744- 4,128

தமிழகம்- 46,504-479

டில்லி -42,829-1,400

குஜராத்-24,055-1,505

உ.பி.,-13,615-399

ராஜஸ்தான்-12,981-301

மேற்கு வங்கம்- 11,494-485

ம.பி.,-10,935-465

ஹரியானா-7,722-100

கர்நாடகா-7,213-89

பீஹார்-6,650-40

ஆந்திரா -6,456-88

காஷ்மீர்-5,220-62

தெலுங்கானா-5,193-187

அசாம்-4,158-08

ஒடிசா-4,055-11

பஞ்சாப் 3,267-71

கேரளா-2,543-20

உத்தர்காண்ட்-1,845-24

ஜார்க்கண்ட்-1,763-08

சத்தீஸ்கர்-1,756-08

திரிபுரா-1,086-01

கோவா-592-0

ஹிமாச்சல பிரதேசம்-556-08

லடாக்-555-01

மணிப்பூர்-490-0

சண்டிகர்-354-06

புதுச்சேரி-215-5

நாகலாந்து-177-0

மிசோரம்-117-0

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.