மோடிக்காக சமோசா, மாங்காய் சட்னி தயாரித்த மோரிசன்

Dina AthibAn
0
பிரதமர் மோடி

இந்தியாவின் பிரபலமான தின்பண்டமான சமோசா, மாம்பழ சட்னியை, பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொள்ள தானே தயார் செய்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் டுவிட்டரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனின் 'சண்டே ஸ்கோமோசாஸ்' பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி மே 31 ஞாயிற்றுக்கிழமை பதிலளித்தார். தனது ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, அவர்கள் "இந்தியப் பெருங்கடலால் இணைக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்திய சமோசாவால் ஒன்றுபட்டுள்ளனர்" என்று கூறினார். 'ஸ்கோமோசாஸ்' சுவையாகத் தெரிகிறது என்று அவர் கூறியபோது, ​​இரு நாடுகளும் கோவிட் -19 க்கு எதிராக வெற்றியைப் பெற்றவுடன் அவர்கள் அதை ஒன்றாக அனுபவிப்பார்கள் என்று பிரதமர் மோடி கூறினார். ஜூன் 4 ம் தேதி அவர்களின் வீடியோ சந்திப்பை எதிர்பார்க்கிறேன் என்று அவர் மேலும் கூறினார். 


கடந்த ஜனவரியில் ஸ்காட் மோரிசன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆஸி.,யில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு தள்ளிபோனது. இந்நிலையில், மோடி முதன்முறையாக ஜூன் 4ம் தேதி ஸ்காட் மோரிசனுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இந்தோ பசிபிக் பகுதியில் சீனா தனது ஆக்கிரமிப்பை அதிகரித்து வரும் பின்னணியில், ஆஸ்திரேலியா உடனான இருதரப்பு உறவுகள் மேம்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா விவகாரத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியதால் ஆஸி.,- சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதனிடையே ஸ்காட் மோரிசன், இந்தியா தங்களது இயற்கையான நண்பன் என குறிப்பிட்டார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் மருந்து பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் தாது உப்புகள் பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி, விவசாய பொருட்கள் ஏற்றுமதி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமென கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!