Type Here to Get Search Results !

கொரோனா சோதனைக்கான இந்தியாவின் முதல் மொபைல் I-LAB அறிமுகம்

COVID-19 சோதனைக்கான இந்தியாவின் முதல் மொபைல் I-LAB அறிமுகம்..!

கொரோனா தொற்று நோயை சோதனை செய்வதற்கான இந்தியாவின் முதல் மொபைல் I-LAB தொடங்கப்பட்டுள்ளது...!
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், கொரோனா தொற்றுக்கான பரிசோதனை வசதி, தொலைத் தூரப் பகுதிகளுக்கும் சென்றடைவதற்காக இந்தியாவின் முதல் மொபைல் I-LAB (தொற்று நோய்களுக்கான பரிசோதனை நிலையம்) திட்டத்தை தொடங்கி வைத்தார். 
இது குறித்து அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறுகையில்... "இந்த பரிசோதனை நிலையத்தை, எளிதில் செல்ல முடியாத தொலைத் தூரப் பகுதிகளுக்கு கொண்டு சென்று கொரோனா பரிசோதனை செய்யலாம். இந்த I-LAB திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 25 COVID-19 RT-PCR பரிசோதனைகளையும், 300 எலிசா பரிசோதனைகளையும், காசநோய், HIV-க்கான கூடுதல் பரிசோதனைகளையும், CGHS (மத்திய அரசின் சுகாதாரத் திட்டம்) கட்டண விகிதத்தில் செய்ய கூடியது" என்றார்.
ஆத்மா நிர்பர் பாரத் பிரச்சாரத்தின் கீழ், இந்தியாவில் முக்கியமான சுகாதார தொழில்நுட்பங்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், தன்னிறைவு பெறும் ஒரு கட்டத்தை நோக்கி படிப்படியாக முன்னேறுவதற்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஆந்திர மாநில மெட்-டெக் மண்டலம் ஒத்துழைத்துள்ளன. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் பயோதொழில்நுட்ப பிரிவு (DBT) மற்றும் ஆந்திரப் பிரதேச மெட்-டெக் ஸோன் (AMTZ) ஆகியவை இணைந்து DBT-AMTZ COMMAND எனப்படும் கூட்டமைப்பை தொடங்கியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில், 7390 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர். மொத்தம் 1,94,324 நோயாளிகள், இதுவரை, COVID-19 தொற்றிலிருந்து குணப்படுத்தியுள்ளனர். மீட்பு வீதம் 52.96% ஆக உயர்கிறது. தற்போது, 1,60,384 செயலில் உள்ள வழக்குகள் மருத்துவ மேற்பார்வையில் உள்ளன. அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கை 699 ஆகவும், தனியார் ஆய்வகங்கள் 254 ஆகவும் (மொத்தம் 953) உயர்த்தப்பட்டுள்ளன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.