Type Here to Get Search Results !

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பி வைக்க, அமிதாப் பச்சன் 4 சிறப்பு விமானங்கள் ஏற்பாடு

நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா ...

மஹாராஷ்டிராவில் தவித்து வந்த 700-க்கும் மேற்பட்ட உத்தர பிரதேச மாநில புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊர் அனுப்பி வைக்க, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேற்று (ஜூன் 10) நான்கு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தார்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பல்வேறு புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கி இருப்பதும், ஊர் திரும்ப அவர்களுக்கு உதவி தேவைப்படுவதும் நடிகர் அமிதாப் பச்சனின் கவனத்திற்கு வந்தது. அமிதாப் உத்தரவின் பேரில், அவரது ஏபி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் யாதவ் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தார். மும்பையில் இருந்து அலகாபாத், கோரக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை காலை தலா 180 பயணிகளுடன் இந்த விமானங்கள் புறப்பட்டன.

புலம்பெயர் தொழிலாளர்களுடன் மேலும் இரண்டு விமானங்கள் இன்று புறப்படும் என அமிதாப் பச்சனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. சமீபத்தில் மஹிம் மற்றும் ஹாஜி அலி தர்க்காக்களுடன் இணைந்து 10 பேருந்துகளில் 300 புலம்பெயர் தொழிலாளர்களை லக்னோ, அலகாபாத், படோஹி மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற இடங்களுக்கு அமிதாப் அனுப்பி வைத்தார். அமிதாப்பின் உதவியால் முதல் முறையாக விமானத்தில் பறந்து வீடு சேர்ந்த தொழிலாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.