
கடந்த 24 மணி நேரத்தில் 450 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 26,532 பேர் குணமடைந்தனர். அங்கு இதுவரை 25 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 12,408 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெற்காசிய நாடுகளிலிருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தொழிலாளர்கள் விடுதிகளில் தங்கி உள்ளனர். மிக நெருக்கமாக கட்டப்பட்டு உள்ள அந்த விடுதிகளில் தான் கொரோனா தொற்று ஏற்படுகிறது. அதை மையமாக வைத்து கொரோனா தொற்று கணக்கிடப்படுகிறது.

AthibAn Tv