Type Here to Get Search Results !

தாக்கரே சகோதரர்களை ஒன்றிணைத்தது நான்தான் – ராஜ் தாக்கரேவுக்கு ஃபட்னாவிஸ் பதில்

“தாக்கரே சகோதரர்களை ஒன்றிணைத்தது நான்தான் என ராஜ் தாக்கரே கூறியதாக, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.”

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாக அமைத்துள்ள ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு, சமீபத்தில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) மற்றும் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண சேனா கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. “இந்திய ஒற்றுமையை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் அதை நமக்கு கட்டாயமாக்க முடியாது” என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மிகுந்த மக்களளவில் ஆதரவு கிடைத்ததால், மாநில அரசு திட்டத்தை திரும்பப் பெற்றது.

இதையடுத்து, வெற்றி விழா இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒரே மேடையில் ஒன்றிணைந்தனர். அவர்களைக் காண தொண்டர்கள் உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினர்.

விழாவில் பேசிய ராஜ் தாக்கரே, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் மற்றும் உத்தவ் தாக்கரே ஒரே மேடையை பகிர்கிறோம். எங்களை ஒன்றிணைக்க பால் தாக்கரே பலமுறை முயன்றார், பலரும் முயன்றனர். ஆனால் முடியாததை தேவேந்திர ஃபட்னாவிஸ் சாதித்துள்ளார்” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த ஃபட்னாவிஸ், “இது மராத்தி மொழிக்கான ஒரு வெற்றியின் நிகழ்வாகும். ஆனால் உத்தவ் தாக்கரே தனது அதிகாரம் இழந்ததைக் குறித்தே பேசினார். மும்பை மாநகராட்சியை 25 ஆண்டுகளாக ஆட்சி செய்தும், நகருக்கு என்ன செய்து வைத்தார் என்பதை அவர் விளக்கவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சி ஏற்ற பிறகு, மும்பைக்கு வளர்ச்சி தந்துள்ளோம். மராத்தி மக்களுக்காக முழுமையாக செயல்பட்டு வருகிறோம்.

நாங்கள் மராத்திகள் என்பதில் பெருமை கொள்கிறோம். அதே நேரத்தில், அனைவரையும் இணைக்கும் இந்துத்துவ கருத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். தாக்கரே சகோதரர்களை ஒன்றிணைத்த பெருமையை எனக்கு அளித்த ராஜ் தாக்கரேவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.