Type Here to Get Search Results !

கெஜ்ரிவாலுக்கு ஹவாலா தரகர்களுடன் நேரடி தொடர்பு... அமலாக்கத்துறை பகிரங்கக் குற்றச்சாட்டு...!

 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஹவாலா தரகர்களுடன் நேரடி தொடர்பு இருப்பதாக அமலாக்க இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

2022 ஆம் ஆண்டு கோவா சட்டமன்றத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்திற்காக ஹவாலா பணம் செலுத்தியதாக வினோத் சவுகானை அமலாக்க இயக்குனரகம் கடந்த 4 ஆம் தேதி கைது செய்தது.

வினோத் சவுகான் அலுவலகத்தில் நடந்த சோதனையில் சுமார் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.

இந்நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், வினோத் சவுகானுக்கும் இடையே நேரடி உரையாடல் நடந்ததாக அமலாக்க இயக்குனரகம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா என்ற உத்தரவை வரும் 4ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.