இந்திய பகுதிக்குள் வந்த பாகிஸ்தானின் உளவு டுரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்) சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், சர்வதேச எல்லை அருகே உள்ள பன்சார் செக்போஸ்ட்டில், இன்று காலை 5: 10 மணியளவில், இந்திய பகுதிக்குள் 250 மீட்டர் தூரம் வரை பாகிஸ்தானின் உளவு டுரோன் வந்துள்ளது. இதனை பார்த்த எல்லை பாதுகாப்பு படை எஸ்ஐ தேவேந்திர சிங், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 8 ரவுண்டுகள் சுட்டு அந்த டுரோனை வீழ்த்தினார். அதில் இருந்த பல ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.


AthibAn Tv