Type Here to Get Search Results !

சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு அடுத்துப் பாதுகாப்புத் துறைக்கு அவசரக்கால நிதியாக ரூ.500 கோடி மத்திய அரசு

latest tamil news

சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு அடுத்துப் பாதுகாப்புத் துறைக்கு அவசரக்கால நிதியாக ரூ.500 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி இந்திய-சீன படைகள் மீண்டும் மோதலில் ஈடுபட்டன. சீன வீரர்கள் கற்கள் கம்பிகளால் மற்றும் ஆணிகளால் ஆன இரும்பு ராடுகளால் தாக்கினார்கள். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் தாக்கியதில் 35க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது

இதனையடுத்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறினால், ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடியும், இந்திய வீரர்களின் தியாகத்தை வீணாக்க விடமாட்டோம், அத்துமீறினால் பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தெரிவித்திருந்தனர். இது குறித்து முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், பாதுகாப்புப் படையினரின் ஆயுத அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில், வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்கு ரூ.500 கோடி வரை சிறப்பு நிதி அதிகாரங்களை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய கால அறிவிப்பில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ பொருட்களை வாங்குவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோதலுக்கும் அல்லது தற்செயலுக்கும் அவர்களின் செயல்பாட்டுத் தயாரிப்பை அதிகரிப்பதற்கும் பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.