
இது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது 5 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 30 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டு உள்ளனர். இருப்பினும் தொற்று பரவலின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வரும் 16 மற்றும் 17 ம் தேதிகளில் பிரதமர்மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


AthibAn Tv