சென்னை: தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளரான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனித்துவமான கதை சொல்லும் பாணி, குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மற்றும் இயல்பான நகைச்சுவை மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் கே. பாக்யராஜ். பல வெற்றிப் படங்களை இயக்கி, நடிகராகவும், வசனகர்த்தாவாகவும் தனது முத்திரையைப் பதித்தார்.
அவரது மறைவு செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
கண்ணீர் அஞ்சலி
தமிழ் திரையுலகில் அழியாத தடம் பதித்த இயக்குநர், நடிகர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி.


AthibAn Tv