Type Here to Get Search Results !

மரக்கன்று நடுவதற்காக தோண்டப்பட்ட குழியில் சிதைந்த நிலையில் ஐம்பொன் நடராஜர் சிலை

 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மரக்கன்று நடுவதற்காக தோண்டப்பட்ட குழியில் சிதைந்த நிலையில் ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

சீராக்ஷியை சேர்ந்த வின்சென்ட் என்பவர் செடி நடுவதற்காக தனது வீட்டில் குழி தோண்டியுள்ளார்.

சுமார் 15 கிலோ எடையுள்ள ஆனந்த நடராஜர் சிலை சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தியதில், கண்டெடுக்கப்பட்ட சிலை சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ளது எனத் தெரியவந்தது.

இதுகுறித்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.