
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் புவியரசன் கூறியதாவது: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், மூன்று, நாட்களுக்கு மத்திய மேற்கு வங்க கடல், ஆந்திர கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.
தென் மேற்கு பருவமழை, வெப்பசலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை நாகை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, கோவை , திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் மழை கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளது.வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


AthibAn Tv