Type Here to Get Search Results !

நேபாளத்தின் எல்லையில் பல பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Problems at the periphery

நேபாளத்தின் எல்லையில் பல பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேபாளத்திற்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் கிழக்கு மேற்காக 43 மலைத்தொடர்களும், சிகரங்களும் உள்ளன. அங்கு ஓடும் நதிகளும் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளை இயற்கையாக வரையறை செய்கின்றன. ஆனால், காலப்போக்கில் நதிகள் திசை மாறும் போது உருவாகும் நிலப்பரப்பை சீனா தன் வசம் ஆக்கிக் கொள்வதாக தெரிகிறது. இதன்படி சீனா நூற்றுக்கணக்கான ஹெக்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நேபாள வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இது தவிர சீன நேபாள எல்லையில் நேபாளத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சீனா சாலைகள் அமைத்து வருகிறது. தற்போது நேபாள கிராமம் 'ருய்' சீனாவின் முழு கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் உள்ள 72க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற குழப்பத்தில் உள்ளனர்.

சீனாவின் இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நேபாளத்தில் போராட்டங்கள் நடந்தாலும், கே.பி.ஒலி தலைமையிலான கம்யூனிச அரசு மவுனம் காப்பதாகவும், சீனாவுக்கு ஆதராவாக போராட்டங்களை அடக்கி விடுவதாகவும் கூறிப்படுகிறது. சமீப காலத்தில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால் நேபாள அரசு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது தெளிவாகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.