
சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது, கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், டிஜிசிஏ அனுமதி வழங்கியுள்ள சரக்கு விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல்(டிஜிசிஏ) அலுவலகம் தெரிவித்துள்ளது.


AthibAn Tv