
தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி தெலுங்கானா அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்திவரும் நடவடிக்கையின் காரணமாக, தற்போதைய சூழ்நிலையில் 10 ம் வகுப்பு தேர்வை நடத்த இயலாத நிலை உள்ளதால், தேர்வு எழுதாமலே அனைவரும் தேர்ச்சி ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 15 ம் தேதி 10 நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் குறையாத காரணத்தால் தேர்வை ஒத்திவைக்க கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு ஜூன் 11 ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


AthibAn Tv