Type Here to Get Search Results !

மணிப்பூரில் 5.5 என்ற ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது

Earthquake measuring 5.5 on Richter Scale hits Uttarakhand's ...

மணிப்பூரில் 5.5 என்ற ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகலாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மணிப்பூரில் இன்று(மே 25) இரவு 8.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவானதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. மணிப்பூரின் தென்மேற்கே உள்ள காக்கிங்கிலிருந்து 11 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

நிலநடுக்கம் மணிப்பூரில் மையம் கொண்டாலும், நிலநடுக்க பாதிப்புகள் அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகலாந்து உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள் முழுவதும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.