
மற்ற மாநிலங்களில் இருந்து அவரவர் சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் திரும்பி வருகிறார்கள் . இதே போல் சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்கள் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தபடுகிறார்கள். இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த முகமது மோசிம் தனிமைப்படுத்தி இருக்காமல், நாமக்கல்லில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் மீது அம்மாவட்ட காவல் துறை நோய்த் தொற்று பரப்பும் சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த முகமது மோசிம் என்பவர் அங்கிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்துள்ளார். நாமக்கல் மில்லில் பணிக்கு செல்வதாக கூறியுள்ளார்.விமான நிலையத்தில் முகமது மோசிமை பரிசோதித்த மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். கையில் அதற்குரிய சீல் குத்தி அனுப்பி வைத்துள்ளனர். அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக எழுதிக் கொடுத்து சென்றுள்ளார்.


AthibAn Tv