
பா.ஜ.கவின் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கடந்த 4 நாட்களாக கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் கொரோனா உறுதியானது.
அவரது தாயாருக்கும் கொரோனா உறுதி செய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தொற்று உறுதி செய்யப்படும்வரை அவருக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சம்பிட் பிட்ராவுக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று வீடு திரும்பினார்.


AthibAn Tv