இந்தியாவில் நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.6 லட்சமாக அதிகரித்தது. உயிரிழப்பு 12,237 ஆக உள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 12,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 328 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 334 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில வாரியாக பாதிப்பு விவரம்
மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,16,752 - 5,651
தமிழகம்- 50,193 - 576
டில்லி -47,102-1,904
குஜராத்-25,093-1,560
உ.பி.,--14,598-435
ராஜஸ்தான்-13,542-313
மேற்கு வங்கம்- 12,300-506
ம.பி.,-11,244-482
ஹரியானா-8,832-130
கர்நாடகா-7,734-102
ஆந்திரா 7,071-90
பீஹார்-6,942-44
தெலுங்கானா-5,675-192
காஷ்மீர்-5,406-65
அசாம்-4,605-08
ஒடிசா-4,338-11
பஞ்சாப் 3,197-72
கேரளா-2,697-20
உத்தர்காண்ட்-2,023-26
ஜார்க்கண்ட்-1,895-10
சத்தீஸ்கர்-1,864-10
திரிபுரா-1,135-01
லடாக்-687-01
கோவா-656-0
ஹிமாச்சல பிரதேசம்-56908
மணிப்பூர்-552-0
சண்டிகர்-358-06
புதுச்சேரி-245-07
நாகலாந்து-193-0
மிசோரம்-121-0



AthibAn Tv